சென்னை: ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை பொருத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த மீட்டரைப் பொருத்துவது தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.இதுதொடர்பாக 2014ல் அரசாணை வெளியிடப்பட்டது.அதில், 6 ஆண்டுகளுக்க முன்பு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை அமலுக்கு வரவில்லை. இதையடுத்து, இந்த அரசாணையை அமல்படுத்தக்கோரி ராஹத் பாதுகாப்பு சமுதாய அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் சுரேந்தர்குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.