முல்லைப்பெரியாறில் கட்டுமானப்பணி டிடிவி கண்டனம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: முல்லை பெரியார் பகுதியில்  கேரள அரசு கட்டுமான பணிகளைத் தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டாமல், உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்து பிரச்னையின் தீவிரத்தை நீதிபதிகளுக்கு புரிய வைத்து கேரளாவின் கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பாதிக்கப்படும் 5 மாவட்ட விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அமமுக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: