இலங்கையை போல் தமிழகத்திலும் 3 மாதங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும்..: மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு

சென்னை: இலங்கையை போல் தமிழகத்திலும் 3 மாதங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 253 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. வெடிகுண்டு தாக்குதலால் இலங்கையில் சோகமயமாக காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேசமயம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை தொலைபேசியில் பேசிய நபர், தம்மை மதுரையை சேர்ந்த சி.எம்.சாமி என அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 3 மாதங்களில் மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறிய அவர், இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தான் தீவிரவாதிகள் சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் மதுரையில் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், என்னை தொடர்பு கொள்ள வேண்டாம். டிஜிபி, செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன் என கூறியதோடு, இதற்கு மதுரையின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் உடந்தையாக இருப்பதாகவும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து மதுரை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சமூக வலைதளத்தில் சி.எம்.சாமி என்பவர் வீடியோவை வெளியிட்டதும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, சாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: