சென்னை: சென்னையில் புதிதாக இயக்கப்படும் அரசு பஸ்களில் நடத்துனருக்கு தனி இருக்கை இல்லை. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சீட் பெல்ட் வசதியும் இல்லை, என எம்டிசி அதிகாரிகள் தகவல்ெபறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) சார்பில் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்கள் காலாவதி மற்றும் பழுது காரணமாக ஓரங்கட்டப்பட்டன. இதையடுத்து, எம்டிசி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன.கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த புதிய பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டன.இந்த பஸ்களில் பல்வேறு சேவை குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநில அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல்பெறும் உரிமை சட்டத்தில் எம்டிசி நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு நிர்வாகம் அளித்த பதிலில், ‘டிஎன்-01 என்1832, 1837, 1857, 1840, 1885, 1929 ஆகிய பஸ்களில் இடதுபுறம் உள்ள இருக்கைகள் 10 மற்றும் கடைசியில் உள்ள 5 இருக்கைகள் என 15 இருக்கைகள் பெண்கள் அமரும்படி உள்ளது. வலதுபுறம் மற்றும் ஓட்டுனரின் இடதுபுறத்தில் உள்ள இருக்கைகள் பொதுவானது.
மோட்டார் வாகன சட்டம் 1989ன் படி பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 39+25 மற்றும் ஓட்டுனருக்கு 1, நடத்துனருக்கு 1 வீதம் இருக்கை இருக்க வேண்டும். பஸ்களில் முதலுதவி பெட்டி, மருந்து உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த பஸ்களில் நடத்துனருக்கு தனி இருக்கை இல்லை.