கழுவெளி பகுதியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

* சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்

மரக்காணம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வண்டிப்பாளையம், கூனிமேடு, கொழுவாரி, காளியாங்குப்பம், தேவிகுளம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மத்தியில் 15 ஆயிரம் ஏக்கரில் 72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சதுப்பு நிலப்பகுதியாக அமைந்துள்ளது கழுவெளி எனப்படும் பக்கிங்காம் கால்வாய்.  இந்த கால்வாய் மரக்காணத்தில் ஆரம்பித்து சென்னை உள்ளிட்ட வழியாக பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆந்திராவில் உள்ள காக்கிநாடா பகுதியில் முடிவடைகிறது.

மரக்காணம் பகுதியில் இந்த சதுப்பு நிலப்பகுதியை சுற்றி 720 ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளது. இந்த கழுவெளி பகுதியில் ஆண்டு முழுக்க தண்ணீர் இருக்கும். இதனால் இதில் அதிகளவில் மீன்கள், நண்டு, இறால் போன்றவைகளும் வளர்கிறது. இந்த கழுவெளி பகுதியில் நிறைந்து இருக்கும் தண்ணீரால் கடல் நீரும் உட்புகாதவாறு பாதுகாக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் விவசாயமும் செழிப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு இயற்கையாக அமைந்துள்ள கழுவெளி மற்றும் நீர் நிலைகளை தேடி சீனா, இலங்கை, பாகிஸ்தான், ரஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்து கூழக்கடா, செந்நாரை, பாம்பு கழுத்து நாரை, சாம்பல் நாரை  உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் இங்கு வருகிறது. இந்த பறவைகள் இங்கு மூன்று மாதத்திற்கு மேல் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கமும் செய்கிறது. இவைகள் பருவ நிலை மாறியவுடன் மீண்டும் தங்களது நாடுகளுக்கு சென்று விடுகின்றன. இங்கு வந்து குவியும் பறவைகளை பாதுகாக்க பறவைகள் சரணாலயம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதன் காரனமாக கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து பறவைகளை பாதுகாக்க வனத்துறையும் யுனிவர்செல் யுகோ பவுண்டேஷன் இணைந்து கழுவெளி சுற்றியுள்ள பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இங்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் வெளி நாட்டு பறவைகள் வந்து செல்கிறது. இந்த பறவைகளை பாதுகாக்க வனத்துறையும் தனியார் நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இவர்களின் பாதுகாப்பையும் மீறி இரவு நேரங்களில் ஒரு சில சமூக விரோதிகள் பறவைகளை வேட்டையாடுகின்றனர். எனவே, இங்கு வரும் வெளிநாட்டு பறவைகளை பாதுகாக்க கிடப்பில் போடப்பட்டுள்ள பறவைகள் சரணாலய திட்டத்தை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும் என்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: