சபாநாயகர் தனபாலிடம் இருந்து இதுவரை தனக்கு நோட்டீஸ் வரவில்லை : கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு

சென்னை :சபாநாயகர் தனபாலிடம் இருந்து இதுவரை தனக்கு நோட்டீஸ் வரவில்லை என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதற்காக கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவை தலைவர் தனபாலிடம் மனு அளித்துள்ளதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் தெரிவித்து இருந்தார். இது குறித்து பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு,கட்சி விரோத செயலில் ஈடுபடவில்லை, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டால் அதற்கு விளக்கம் தருவோம்; சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்த பிறகு அதனடிப்படையில் எனது முடிவு இருக்கும் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: