சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதில்மனு தாக்கல் செய்ய ஜூன் 10 வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் கொடநாடு விவகாரம் தொடர்பாக பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு விதித்த தடையும் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.