சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பாஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வழக்கில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷாவுக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. தற்போது பாஷா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு வயது காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்க ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் எனக்கோரி பாஷாவின் மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.