சென்னை: நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மழை பெய்ய துவங்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.