கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவி மே 4ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2014-15 மற்றும் 2017-18ம் ஆண்டுகளுக்கான, தமிழ்நாடு கூட்டுறவு சார்பு பணிகளில் அடங்கிய கூட்டுறவு துறைக்கான கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக விண்ணப்பதாரர்களின் பட்டியல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி முதல் மே 4ம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.“ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: