சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக தொண்டை வலி காரணமாக பேசுவதை தவிர்த்து வந்தார். தைராய்டு மற்றும் குரல் வள பிரச்னை இருந்து வந்ததால் அமெரிக்கா சென்ற அவர் ஒரு மாதத்துக்கு மேலாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரி 16ம் தேதி சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் விஜயகாந்த் கடந்த 15ம் தேதி சென்னையில் உள்ள 3 மக்களவை ெதாகுதியில் பிரசாரம் செய்தார். வேனில் இருந்தவாறு அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஓரிரு நிமிடங்கள் மட்டுமே, ரொம்ப மெதுவாக பேசினார்.