ஆலந்தூர்: மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 240 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 112 மாணவர்களும், 128 மாணவிகளும் அடங்குவர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதால், அப்பள்ளி 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது.அனுஷ் ரஞ்சித் ரபீன் என்ற மாணவர் 600க்கு 582 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் வேதியியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளார். ரங்கராஜன் என்ற மாணவர் 580 மதிப்பெண்களுடன், வணிகவியலில் நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
பார்கவி என்ற மாணவி 578 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கிறார். மேலும், பல்வேறு பாடப் பிரிவுகளில் 16 மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வணிகவியலில் 7 பேர், கம்ப்யூட்டர் சயின்சில் 4 பேர், காமர்சில் 3 பேர், கணிதத்தில் ஒருவர், வேதியியலில் ஒருவர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்குள் 20 பேரும், 500க்குள் 63 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோல் நங்கநல்லூர் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 166 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 69 மாணவர்கள், 97 மாணவிகள் அடங்குவர்.