சென்னை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21-ம் தேதி விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வேலூரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளுக்கும், ஆண்டிபட்டி, பெரியகுளம், தஞ்சை, ஆம்பூர், உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளும் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. வரும் மே 19ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடராம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.