சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு தனது நண்பர் பத்ரி கஸ்தூரியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். இதில் வைபவ், சோனா அல்தாப், அஞ்சனா கீர்த்தி, சம்பத்ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ‘நடிகர்னா ஓட்டு போட்டு விடுவார்களா, எம்.ஜி.ஆரா நீ’, ‘எலெக்ஷன் வந்தால்தான் மக்கள் ஞாபகம் வருமா’, ‘அம்மா எப்படி செத்தாங்க’ உள்ளிட்ட வசனங்கள் இருந்தது. இந்த படம் வரும் 12ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு வெளிவருவதாக தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: பட ரிலீசுக்கு தயாராக இருந்தோம். எதிர்பாராதவிதமாக படத்தை வெளியிட முடியவில்லை. சில பல காரணங்கள் அதற்கு இருக்கிறது.