சென்னை: நீதிமன்றத்தின் சுமைகளை குறைப்பதில் சமரச மையங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையங்கள் மூலமாக சுமூகத் தீர்வு காணச் செய்வதே இதன் நோக்கமாகும். நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளை முடித்து வைக்க தங்களது வழக்குகளை சமரச மையத்திற்கு மனுதாரரோ அல்லது அவரின் வழக்குரைஞரோ அனுப்பி முடித்து வைக்க வேண்டுகோள் விடுக்கலாம். இந்த சமரச மையங்களின் நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள், உறவுகள் மேம்பட வழிவகை செய்கின்றது. உகந்த தீர்வுகளை எட்டுவதால் மேல்முறையீடு தவிர்க்கப்படுகின்றது. செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றது. சமரச முடிவுகளில் காத்திருப்பு நேரங்களும், பொருட்செலவுகளும் சேமிக்கப்படுகின்றன.இவற்றின் பயன்பாடுகள் நமது குடும்பத்திற்காகவும், சமூக செயல்பாட்டிற்காகவும் அமைகின்றன.