அம்பத்தூர்: கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (62). இவர், தனது வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2ம் தேதி மாலை, சிவப்பிரகாசம் வீட்டிற்கு காரில் வந்த 5 பேர், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி, அவரது வீட்டை சோதனை செய்து 3 லட்சம், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 2 செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிவப்பிரகாசம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது, தனது வீட்டிற்கு வந்தவர்கள் போலி அதிகாரிகள் என தெரியவந்தது. புகாரின்படி, கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.