திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கலைச்செல்வி (21). இவர், அதே பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் வரும் 10ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கலைச்செல்விக்கும், அசோகனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், ‘தனக்கு திருமணம் வேண்டாம்’ என கலைச்செல்வி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.