காஞ்சிபுரம் அருகே தனியார் இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 3 பேர் பலி!

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டியில் தனியார் இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்தது. இதில் தினேஷ், அகிலேஷ், சுரேந்தர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பாய்லர் வெடித்ததில் காயமடைந்த 5 ஊழியர்கள் பொத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 3 தொழிலாளர்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், நேற்று நள்ளிரவு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென பாய்லர் வெடித்தது.

இதில், 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மூவருமே உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் 5 பேருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் பெரும்பாலோனோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விபத்து குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: