புழல்: புழல் அகதிகள் முகாமில் தம்பதியிடம் செல்போன், செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 1200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை அகதிகள் முகாமை சேர்ந்த விஜயகுமார் (47), இவரது மனைவி ஜெயவாணி (43) ஆகியோர் அங்குள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, சுற்றுச்சுவர் வழியாக எகிறிக் குதித்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, விஜயகுமார் அருகில் இருந்த 2 செல்போன்கள் மற்றும் ஜெயவாணி அணிந்திருந்த ஒரு சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். திடுக்கிட்டு எழுந்த ஜெயவாணி, திருடன், திருடன் என கூச்சலிட்டார்.