காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் புல்வாமா அருகே ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 லஷ்கர் இ தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த இரண்டு மாதமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இருந்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்துவது தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மூன்றாவது நாளாக நேற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறியது.ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுசாராவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் காலை 9 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச்சூடு ஒரு சில மணி நேரம் நீடித்தது. இந்திய நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. சிறிய ரக வெடிகுண்டுகள், சிறிய ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவமும் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது.