மதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுயேச்சையாக போட்டியிடும் பசும்பொன் பாண்டியனுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதேபோல், திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கணேசனுக்கும் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.