சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை பற்றி ஸ்டாலின் பேச தடை விதிக்குமாறு தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசின் மனுவுக்கு ஏப்ரல் 3ம் தேதிக்குள் ஸ்டாலின் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளையில் முதல்வரை தொடர்புபடுத்தி பேசியதாக ஸ்டாலின் மீது ஏற்கனவே அவதூறு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.