பழநி: இன்ஜின் பழுது காரணமாக பழநியில் திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் 4 மணிநேரத்திற்கும் மேலாக நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு பாலக்காட்டிலிருந்து புறப்படும் இந்த ரயில் பழநிக்கு காலை 7.45க்கு வந்து சேரும். சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், பழநி கடந்து சென்ற பின்பு திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு செல்லும். வழக்கம்போல் இன்று காலை 7.45க்கு பழநி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில், சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக காத்திருந்தது.