சென்னை : 5970 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேமநல நிதி முறையாக கட்டவில்லை என கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு பார் கவுன்சில் 5 ஆயிரத்து 970 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.