சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் போக்சோவில் கைது

திருவொற்றியூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். எண்ணூரை சேர்ந்தவர் ராஜி (79). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன்கள், பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தம்பதியின் 6 வயது சிறுமிக்கு ராஜி பாலியல் துன்புறுத்தல்  செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் ராஜியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: