பூந்தமல்லி: போரூர் டிரங்க் சாலையில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலில் கடந்த ஆண்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மசாலாப் பொருட்களின் மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து திருவள்ளுர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த ஓட்டலுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் ஓட்டல் நிர்வாகம் இதுவரை அபராத தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.