சென்னை: தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் 30 சதவீதம் கூடுதல் விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் சட்டவிரோத மதுவிற்பனையை தடுத்து நிறுத்துவது மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட எஸ்.பியின் கடமை. அதன்படி, கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து 50 சதவீதம் கூடுதல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள மதுபானக்கடைகளை கண்காணிக்க வேண்டும். நகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகள், அவற்றுக்கு அருகில் உள்ள கடைகளை கண்காணிக்க வேண்டும்.