அதிமுக, திமுக என இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன: சத்யபிரதா சாஹூ

சென்னை: அதிமுக, திமுக என இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன எனவும், முக்கிய புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். மேலும் அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறினார். வேட்பாளர்கள் 5 ஆண்டு வருமான வரி குறித்த தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறினார். வேட்பாளர்கள் தவறான தகவலை அளித்திருந்தால், நீதிமன்றம் மற்றும் வருமான வரித்துறை விசாரணையை சந்திக்க நேரிடும் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: