சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் நபர்கள், இரண்டு விதமான சேமநல நிதிகளை செலுத்த வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 11 ஆயிரம், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு 3 ஆயிரம் சேமநல நிதியாக வழங்கவேண்டும். வழக்குரைஞர்கள் மரணமடைந்தால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக 7 லட்சமும், அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் 50 ஆயிரமும் சேம நல நிதியில் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும். இதில், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதி தவணை தொகையை தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த தொகையைச் செலுத்தாத வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.