சென்னை: சென்னையில் பொதுமக்கள் கலர் பொடிகள் தூவி ஹோலி பண்டிகை மகிழ்ச்சியுடன் ெகாண்டாடினர். நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் வசிக்கும் வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், பிராட்வே, கீழ்ப்பாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கலர் பொடிகளை தூவி ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கடையே நாடாளுமன்ற தேர்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் துணை ராணுவப்படையினர் கடந்த ஒரு வாரமாக கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.