உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தும் சுய உதவி குழு பெண்கள்: முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் புகழாரம்

சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் கலாசாரத்தை மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கற்றுக் கொடுக்கின்றனர் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜன் பேசினார்.காஞ்சிபுரத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் சார்பாக உலக மகளிர் தினவிழா நேற்று நடந்தது. அதன் நிர்வாக அறங்காவலர் கல்பனா சங்கர் தலைமை தாங்கினார். முதன்மை செயல் அலுவலர் சீனிவாஸ் கிருஷ்ணசாமி  வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜன் கலந்து கொண்டு பேசுகையில், உழைப்பு மற்றும் தைரியத்தை கற்று கொடுக்கும் மகளிர் சுய உதவி குழுவினர் நிறைந்திருக்கும் விழாவில் கலந்து கொள்வதில்  நான் பெருமை அடைகிறேன்.பொதுவாக வங்கியில் கடன் பெறுவது என்பது எளிது. ஆனால் அதை திருப்பி செலுத்துவது மிகவும் கடினம். ஆனால், இந்த கடன் வாங்கிய பெண்கள் உரிய நேரத்தில் திருப்பி செலுத்துகிறார்கள் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: