சீன தொழிலதிபரிடம் 1.40 லட்சம் திருட்டு: ஸ்டார் ஓட்டல் ஊழியர் கைது

சென்னை: நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த சீன தொழிலதிபரிடம் 1.40 லட்சத்தை திருடிய ஓட்டல் ஊழியரை போலீசார் கைது ெசய்தனர். சீன நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஜின்ஈ (38). இவர், கடந்த வாரம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். அப்போது, அவர் அறையில் ைவத்திருந்த 1.40 லட்சம் மாயமானது. இதுகுறித்து ஜின்ஈ ஓட்டல் மேலாளரிடம் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், தொழிலதிபர் ஜின்ஈ தங்கி இருந்த அறையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஓட்டல் ஊழியர் மத்தியாஸ் மட்டும் அறைக்கு வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. உடனே மத்தியாசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சீன தொழிலதிபர் ஜின்ஈ வெளியில் சென்று இருந்தபோது அறையின் மாற்று சாவி மூலம் 1.40 லட்சம் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து போலீசார் மத்தியாசை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் ெசய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: