தி.மலை : திருவண்ணாமலையில் 49 கோவில்கள் தொடர்பான ஆவணங்களை பராமரிக்காதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடுத்த வாரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.