சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு முழு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து விலக கோரி எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ேடாரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றங்களின் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் பலர் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், குற்றவாளிகளை காப்பற்றும் நோக்கில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ேகாரி மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 3வது நாளாக, மாநிலம் முழுவதும் நேற்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கு ஆதரவாக அவர்களின் கல்லூரி முன்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.