அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள், மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.இவற்றுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அவிநாசியில் குடிநீர் விநியோகம் வழங்கவில்லை. இதனால், பொது மக்களும் பெண்களும் குடிநீருக்காக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அவிநாசி பேரூராட்சி பகுதி மக்கள் கூறுகையில்: பேரூராட்சியின் மூலமாக வாரம் ஒரு முறை அல்து 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், மேட்டுப்பாளையம் இரண்டாவது திட்ட குடிநீர் தற்போது 25 நாட்களுக்கு ஒரு முறை கூட கிடைப்பதில்லை.