திருவனந்தபுரம்: பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தாேறும் பங்குனி உத்தர திருவிழா விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ஒட்டி நேற்று மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.