அனகாபுத்தூரில் இன்ஜினியர் வீட்டில் 70 பவுன் கொள்ளை

சென்னை :  சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் அலெக்ஸ். இன்ஜினியர். இவர், நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 70 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். மருத்துவமனை சென்றுவிட்டு திரும்பிய அலெக்ஸ், வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து சங்கர்நகர் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: