சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் எங்கே என்று வழக்கு தொடர்ந்த அறப்போர் இயக்கத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உள்ளாட்சித் துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. மேலும், இந்த ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. இதையடுத்து, தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்ப தடை விதிக்கவும், ஏற்கனவே அவதூறு பரப்பியதற்கு 1 கோடி இழப்பீடு வழங்குமாறு அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.