பெரம்பூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை சேர்ந்தவர் இளங்கோவன் (28), கூலி தொழிலாளி. இவர், விபத்தில் ஒரு காலை இழந்து விட்டார். அதைப்போல், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி (45), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது இயந்திரத்தில் சிக்கி ஒரு கையை இழந்து விட்டார். புழல் அடுத்த காரனோடையை சேர்ந்தவர் முனுசாமி (54). இவர், சர்க்கரை வியாதியால் ஒரு கையை இழந்து விட்டார். செங்குன்றத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (45). சர்க்கரை வியாதியால் ஒரு காலை இழந்து விட்டார். இவர்களுக்கு இலவசமாக செயற்கை கை, கால்களை பொருத்தி ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது: