சென்னை: சென்னை நெசப்பாக்கம் கணபதி நபரை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 14 மற்றும் 11 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் இல்லாததால் ஆறுமுகம் இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களாக ஆறுமுகம் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வந்து, தனது 2 மகள்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது தந்தையே பாலியல் தொந்தரவில் ஈடுபடுகிறாரே என 2 மகள்களும் வேதனையில் தவித்தனர். இந்நிலையில், கடந்த வாரம் குழந்தைகள் நல குழுமத்தில் 2 மகள்களும் செல்போன் மூலம் தனது தந்தை ஆறுமுகத்தின் மீது பாலியல் புகார் கொடுத்தனர். அதை தொடர்ந்து ஆறுமுகத்திடம் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைகள் நல குழும அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மீண்டும் நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்பகுதி முழுவதும் தெரியவந்தது.