சென்னை : சுதந்திர போராட்டத்தில் இன்னுயிரை நீத்த பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 வீரர்களுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் 1920ம் ஆண்டில் ஆங்கிலேயர் அதிகாரித்தை எதிர்த்து போராடியதால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர் பலர் காயம் அடைந்தனர். அதில் இன்னுயிரை நீத்த வீரர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் உயிர் நீத்த 16 வீரர்களை கவுரவிக்கும் வகையிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.