சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து உயர் நிலையில் உள்ள மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசின் பணியோடு தங்களின் பங்களிப்பும் இணையும் போதுதான் கல்வியின் தரம் உயரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.