நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை கைவிட வேண்டும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரியாபட்டினத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தென்னங்குளம், செண்பகராயநல்லூர், மணக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றுள்ளனர்.