சென்னை: உதகை நீதிமன்றம் தங்களின் ஜாமீனை ரத்து செய்ததை எதிர்த்து கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான், மனோஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தெகல்கா முன்னாள் ஆசியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டிருந்தார். இதில், அந்த சம்பவங்களில் தொடர்புடையதாக கூறப்படும் மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக பேட்டியளித்தனர். இருவரும் ஜாமீனில் உள்ளனர். இதையடுத்து, மனோஜ், சயான் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உதகை போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உதகை நீதிமன்றம் இருவரின் ஜாமீனையும் ரத்து செய்து கடந்த மாதம் 8ம் ேததி உத்தரவிட்டது. உதகை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சயான், மனோஜ் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.