சென்னை: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 மாதமாக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. தற்போது அந்த இடத்தில் புதிய துணை வேந்தராக டாக்டர் தாமரைச் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று வெளியிட்டார். அவர் ஆளுநர் மாளிகையில் நேரில் சென்று நேற்று பெற்றுக் கொண்டார். இவர் தற்போது அண்ணா பல்கலையின் எம்ஐடியில் கணினி தொழில்நுட்பத்துறை பேராசிரியராக உள்ளார்.