கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் உள்ள அருண்குமார்(35) என்பவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.