மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிர்பாராத கெடுபிடிகள் காத்திருக்கின்றன. எப்படியும் தப்ப முடியாத அளவுக்கு புதிதாக சில கிடுக்கிப்பிடி விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் இதுவரை, தங்கள் சொத்துக் கணக்கை, வேட்புமனுவுடன் இணைக்கும் வாக்குமூல இணைப்பில் சேர்த்துவிடுவர். முந்தைய ஆண்டு தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கை அடிப்படையாக வைத்து சொத்தை காட்டினால் போதும். இனி மக்களவை ேதர்தல் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் புதிய விதிகள் கடைபிடிக்கப்படும். வேட்புமனுவுடன் விண்ணப்பம் 26ன் படி, சொத்துக்கணக்கை விரிவாக காட்ட வேண்டும். அதாவது, வேட்பாளர், அவர் மனைவி, மகன், மகள்களில் ஆரம்பித்து குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்துக்கள், உள்நாடு, வெளிநாட்டில் உள்ள முதலீடுகள், டெபாசிட்களை காட்ட வேண்டும். இதில் இன்னொரு விதி, பான் நம்பரை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். வேட்பாளரின் பான் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரின் பான் எண்ணும் குறிப்பிட வேண்டும்.