திண்டுக்கல்: ஸ்மார்ட் கார்டுகளில் புதிய மெஷின்கள் மூலம் பிழை திருத்தம் செய்யப்படுமென அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் முறை கேடுகளை தடுப்பதற்காக ரேஷன்கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. இதிலும் பெயர், முகவரி உள்பட பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இவற்றை கார்டுதாரர்களே ஆன்லைனில் திருத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. கார்டுதாரர்கள் தங்கள் இஷ்டத்திற்கு திருத்தங்களை செய்து கொண்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வழங்கல் அலுவலர்களே பிழைகளை திருத்தம் செய்வதற்கு வசதியாக, ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய இயந்திரங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளது.