சென்னை: அபிநந்தன் இந்தியாவிற்கு திரும்பியதை தொடர்ந்து, அவரது பெற்றோர் வசிக்கும் மாடம்பாக்கத்தில் உள்ள பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானி அபிநந்தன் நேற்று விடுவிக்கப்பட்டு மாலை வாகா எல்லை வந்தடைந்தார். பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் இந்திய விமான படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது, இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.