புதுவை: பாகிஸ்தான் வசம் சிக்கிய சென்னை விமானி தாயகம் திரும்பியதில் இந்தியனாகவும், தமிழனாகவும் பெருமைகொள்வதாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அபிநந்தனின் வீரம் பாராட்டிற்குரியது என கூறியுள்ள அவர், கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரார்த்தனை அபிநந்தனுடன் உள்ளதாக கூறியுள்ளார்.